A.A.வின் பன்னிரண்டு வழி முறைகள் (12 steps of AA in Tamil)
1.மதுவைப் பொறுத்தவரை, நாங்கள் சக்தி அற்றவர்கள் என ஒப்புக் கொண்டோம். வாழ்க்கையை எங்களால் சரி வர நடத்த முடியவில்லை.
2.எங்களைவிட வலிமை பொருந்திய சக்தி எங்களுக்கு மனத்தெளிவை அளிக்கக்கூடும் என்ற நம்பிக்கைக்கு வந்தோம்.
3.நாங்கள் புரிந்துகொண்ட இறைவனின் பொறுப்பில் எங்கள் சித்தத்தையும், வாழ்க்கையையும் ஒப்படைக்க முடிவு செய்தோம்.
4.அச்சமின்றி எங்களைப் பற்றிய ஆழ்ந்த குணப்பட்டியல் தயார் செய்தோம்.
5.இறைவனிடமும், எங்களிடமும், மற்றொருவரிடமும் எங்கள் தவறுகளின் உண்மையான தன்மையை ஒப்புக் கொண்டோம்.
6.இறைவன் எங்களின் இந்த எல்லாக் குணக் கோளாறுகளையும் அகற்ற முழூ மனதோடு தயார் படுத்திக் கொண்டோம்.
7.எங்களூடைய குறைபாடுகளை நீக்கும்படி இறைவனைப் பணிவோடு வேண்டினோம்.
8.நாங்கள் யாருக்கெல்லாம் தீமை செய்தோம் என்ற பட்டியல் தயாரித்து அவற்றுக்குப் பரிகாரம் செய்யத் தயாரானோம்.
9.எங்களால் பாதிக்கப்பட்டவர்களூக்கோ, மற்றவர்களூக்கோ, தீங்கு விளைவிக்கா வண்ணம் கூடுமான வரையில் நேரடியாகப் பரிகாரம் செய்தோம்.
10.தொடர்ந்து சுயப்பரிசீலனை செய்தோம். தவறு செய்த போதெல்லாம் உடனடியாக ஒப்புக்கொண்டோம்.
11.பிரார்த்தனை மற்றும் தியானத்தின் மூலம் நாங்கள் புரிந்து கொண்ட இறைவனிடம் உள்ளார்ந்த தொடர்பை வளர்த்துக் கொள்ள முயற்சித்தோம். எங்களுக்காக அவன் சித்தம் என்னவென்று அறிந்து கொள்ள மட்டுமே வேண்டி அதை நிறைவேற்றும் சக்தியைக் கோரி பிரார்த்தித்தோம்.
12.இவ்வழிமுறைகளை பின்பற்றியதின் பலனாக ஆன்மீக விழிப்பைப் பெற்றோம். இந்த வழிமுறைகளை மற்ற குடிநோயளிகளுக்கு எடுத்துக் கூற முயற்சித்தோம். இந்தத் தத்துவகளை எங்கள் வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கடைப்பிடிக்க முயற்சித்தோம்.